Thursday, March 31, 2011

புது வைரஸ் - DAT75.TMP

நேற்றுமுதல் என் லேப்டாப்பில் ஒரு புதுவித வைரஸ் அலெர்ட் வந்துகொண்டிருந்தது.

கீழ்க்கண்டது போல:
62.122.73.203/545/getcfg.php.
Type: URL:Mal 
                   Action: Blocked
என மீண்டும் மீண்டும் ஆன்டிவைரஸ் பாப்-அப் அலெர்ட் காட்ட, அடிக்கடி இணைய இணைப்பும் தானாக துண்டிக்கப்பட்டது என எக்கச்சக்க பிரச்சினைகள்.

TEMP போல்டரில் DAT75.TMP என்ற பெயரில் அழிக்கமுடியாமல் உட்கார்ந்திருந்த பைலே எல்லாவற்றிற்கும் மூலகாரணம் என புரிந்தது.

TEMP போல்டரை கிளீன் செய்தால் மேட்டர் ஓவர் என லேட்டாக உரைக்க,
அப்படி, இப்படி தேடியதில் கடைசியாக கிடைத்தது சிக்கலுக்கான தீர்வு.

இதோ TFC - Temp File Cleaner by OldTimer டவுன்லோட் செய்து ரன் செய்ய சில விநாடிகளில் பிரச்னை ஓவர்.

என்னைப்போல் தடுமாறிக் கொண்டிருக்கும் நண்பர்களுக்காக இந்த தகவல்.






Monday, March 28, 2011

லஞ்சம் இல்லாத ஓட்டளிப்போம் - கலெக்டர் சகாயம்

சில மாதங்களுக்கு முன்னர் மாமனிதர் என ஈரோடு கதிர் அண்ணனாலும், பெருமாள்முருகன் ஐயாவால் சமீபத்தில் விரிவாக தனி தொடராகவே குறிப்பிட்டு எழுதப்படுபவருமான நாமக்கல் முன்னாள் கலெக்டர் சகாயம் அவர்கள் மீண்டும் லைம்லைட்டுக்கு வர ஆரம்பித்திருக்கிறார்.


நாமக்கல் கலெக்டராக பணியில் இருந்தபோது எல்லா தரப்பு மக்களின் நண்பனாக விளங்கியவர். சொத்துவிபர பட்டியலை பொதுப்பார்வைக்கு வெளியிட்ட முதல் கலெக்டராக பலரின் புருவத்தையும் உயரவைத்தவர்.



அரசியல்வாதிகளின் உள்ளடி வேலைகளின் காரணமாக எதிர்பாரா விதமாக நாமக்கல் கலெக்டர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டவர் அதன் பின்னர் திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

தேர்தல் ஆணையத்தின் வழக்கமான தேர்தல் நேர அதிரடியான மாற்றத்தில் மதுரை மாவட்ட கலெக்டராக இருந்த திரு. சி.காமராஜ் ஈரோடு மாவட்டத்துக்கு மாற்றப்பட, அவருக்கு பதிலாக சென்ற வாரத்தில் மதுரை மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.சகாயம் அவர்கள். தனது வழக்கமான அதிரடியை முழுதாய் தொடங்கவில்லை என்றாலும் வழக்கமான விழிப்புணர்வினை பரப்பும் செயல்களைத் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறார் சகாயம்.




உதாரணம்: நேற்று மாணவர்களிடையே தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் பற்றி பேசியது.

தினமலர் நாளிதழ் +2 முடித்த மாணவர்களுக்கு அடுத்து என்ன படிக்கலாம் என்பது பற்றி நடத்திய வழிகாட்டி என்னும் நிகழ்ச்சி மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் நடந்துகொண்டு இருந்தது. தேர்தல் பணி காரணமாக, அவ்வழியே சென்று கொண்டிருந்த கலெக்டர், திடீரென நிகழ்ச்சி அரங்கிற்கு வந்தார். ஓட்டளிப்பதன் முக்கியத்துவம் பற்றி மாணவர்கள், பெற்றோர்களிடம் அவர் பேசியதாவது: 

 உலகின் பெரிய ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம், என்ற பெருமை நமக்கு உள்ளது. ஜனநாயகத்தின் அடித்தளமே தேர்தல் தான். சுதந்திரமாக தேர்தலை நடத்த, எங்களைப் போன்ற அலுவலர்களை தேர்தல் கமிஷன் பணித்துள்ளது. சுதந்திரமான, நேர்மையான, நியாயமான தேர்தலை சிலர் மட்டுமே சேர்ந்து நடத்த முடியாது. அமெரிக்கா, ரஷியா, சீனா போன்ற ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒவ்வொரு அடையாளம் உண்டு. அதே போல நமது தேசத்திற்கு உள்ள அடையாளம் உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமை. அத்தகைய ஜனநாயகம் போற்றப்பட வேண்டுமென்றால் தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடந்தால்தான் அது உண்மையான ஜனநாயகமாகும். இப்பணியை மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை, போலீஸ் துறையால் மட்டுமே செய்து விட முடியாது. அனைவருடைய பங்களிப்பும் இதில் இடம்பெற வேண்டும். 2 நாட்களில் 200க்கும் மேற்பட்ட வந்த புகாரின் அடிப்படையில் பல இடங்களுக்கு சென்று நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டேன். உங்களைப் போன்ற இளைஞர்களுக்கும் கடமை உள்ளது. நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலில், 18 வயது பூர்த்தியான அனைவரும் ஓட்டளிக்க வேண்டும். 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்ய வேண்டும். மற்றவர்களையும் ஓட்டளிக்க சொல்லுங்கள். நேர்மையான ஓட்டுப்பதிவு முக்கியம். அன்பளிப்பு பெற்றாலும் அது லஞ்சம் தான். அதைப் பெறாமல் ஓட்டளியுங்கள். லஞ்சம் பெற்று அளிக்கும் வாக்கு; தேச நலனுக்கு தூக்கு.எந்த மாற்றத்தையும் இளைஞர்கள் தான் உருவாக்க முடியும். "லஞ்சம் இல்லாத ஓட்டளிப்போம்' என மற்றவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்புங்கள் என்றார். 

 இதற்கு முன்னரும் ஒரு தேர்தல் நேரத்தில்(திருமங்கலம் இடைத்தேர்தல் என நினைக்கிறேன்) நாமக்கல் கலெக்டராக பணியாற்றிய திரு. சுந்தரராமன் மதுரை கலெக்டராக தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டதாக நினைவு. இம்முறை அதே நாமக்கல் மாவட்டத்தில் கலெக்டராக பணியாற்றிய சகாயம் அவர்கள் மதுரைக்கு கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, March 26, 2011

இலக்கியா

காலை 9 மணி ஆகியும் கூட, இன்னமும் 6 மணி வானம்போல் வெண்மேகத்தால் இழுத்து போர்த்தி தூங்கிக்கொண்டு இடையறாது பெய்து கொண்டிருக்கும் மழை. இன்றைக்கு ஒரு மூன்றாந்தர லாட்ஜில் நடக்குமென சொல்லியிருந்த ”அடுத்தவீட்டு அந்தரங்கம்” என்னும் உலகப்படத்தின் கதைவிவாதம் தொடர்மழையால் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டதில் ஓசி ஃபாரின் சரக்கு போச்சே என்ற வருத்தம் உள்ளுக்குள் இருந்தாலும் கூட, இருப்பில் இருக்கும் சரக்கின் உதவியால் போதையை இறங்கவிடாமல் ஏற்றிக்கொண்டே, பெய்யும் பகல்நேரத்து மழைரசிக்க தனிமையில் ஒரு பகல் கிடைத்திருக்கிறதே என்ற உற்சாகம் மனமெங்கும் பொங்கி வழியத்தான் செய்தது.

பால்கனியில் டீப்பாயின் முன்னமர்ந்து என் நண்பர் ஒருவர் பலமாய் பரிந்துரைத்திருந்த ஹென்னசி கோனியாக்கை எடுத்து வைத்தேன். கூடவே சின்ன ஐஸ் பாக்ஸையும், கண்ணாடி கிளாஸ்களையும். எதிர்வீட்டு கதவின்வழி ஏராள மார்புகள் பிதுங்கிவழிய எட்டிப்பார்த்த சேட்டுப் பெண்ணொருத்தி ”குடிகாரப் பயலே” என பொருள்தரும்படி ஹிந்தியில் திட்டிவிட்டு முகத்தில் அறைந்தாற்போல் கதவைச் சாத்தினாள். விரலிடுக்கில் புகையும் கிங்ஸ் உடன் வழிந்த புன்னகையை மிகையாய் காட்டியபடியே வேறெந்தச் சலனமுமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவளைச் சொல்லி குற்றமில்லை. அவளின் கவலை அவளுக்கு. செளகார்பேட்டையில் வட்டிக்கடை வைத்திருக்கும் அவளின் கணவன் பொறுப்பிலிருக்கும் வயதான சேட்டு கிழவனுக்கு கொய்யாக்காய் அளவிலான முலைகள் கொண்ட சின்னஞ்சிறு பெண்கள் என்றால் கொள்ளைப்பிரியம். குதத்தில் பீறிடும் அளவுக்கு குடித்துவிட்டு நிர்வாண உலகில் அவ்வகைப் பெண்களிடம் பேரின்பத்தை காண முயற்சித்து தோற்றுக்கொண்டே இருப்பான் இயலாமையால். அந்த வயோதிக கிழவன் தன் இயலாமையின் வலியைப் போக்கும் இடம் சற்றுமுன் எட்டிப்பார்த்து திட்டிப்போன அவனின் குண்டுமுலை மார்வாடி மனைவியிடம்தான். போதை முழுதாய் இறங்கும் முன்னரே அவளை உச்சக்கட்ட உபாதைகளுக்கு உட்படுத்தி அவளின் துன்பத்தின் ஊடே நிகழும் இயற்கைக்கு முரணான அதீத முயற்களின் ஒருவித இன்பம் அனுபவிப்பான். அதன் வெளிப்பாடே மதுக்கோப்பையுடன் கண்ட என்னை நோக்கி சீற்றத்துடன் வெளிப்பட்ட அவளின் "குடிகாரப் பயலே".

கண்ணாடிக் கோப்பையில் அழகாய் ஊற்றி, அளவாய் கலந்த சோடாவுடன், மிதந்த ஐஸ் கியூப்பின் ஜில்லிப்பில் அதிர்ந்த உதடுகளின் துடிப்பை உணர்ந்தபடியே மெலிதாய் அருந்த ஆரம்பித்தேன். சூடான ஆம்லெட்களின் துணையுடன், நுரையீரல் நனைத்த சுருள்களாய் கிங்ஸ் ஒருபக்கம் புகைய, பெய்யும் மழையும் மெலிதாய் ஏற ஆரம்பித்த போதையும் கலந்து தந்திருந்த இனம்புரியா ஓர் உணர்வு உள்ளுக்குள் ஏற ஆரம்பித்திருந்தது.

“உறக்கம் இல்லா முன்னிரவில் என் உள்மனதில் ஒரு மாறுதலா” மழைச் சத்தத்தையும் மீறி எங்கிருந்தோ மெலிதாய் காற்றில் மிதந்துவந்த பாடல்வரிகள் செவியை நிறைத்தன. 

மனதுக்கு பிடித்த பாடல்
முன்பகல் வேளையில்
பக்கத்தில் எங்கோ ஒரு பிளாட்டில்
கேட்கும் சுகம் போன்றது
மீண்டும் நெஞ்சுக்குள் எட்டி பார்க்கும் காதல்

- மைக்கேல் ராஜ்

என எங்கோ படித்திருந்த கவிதை வரிகள் சம்பந்தமில்லாமல் நினைவுக்கு வந்ததை தவிர்க்க முடியவில்லை. 

இப்போதைய வாழ்க்கை முறைக்கு காதல் என சொல்ல மனம் தயங்கினாலும் சமீப காலங்களில் காதல்-காமம் இரண்டிற்கும் இடையே சிக்கித்தவித்துக் கொண்டிருந்த ஒருவித இன்பமான உறவுமுறையை தந்துக் கொண்டிருந்த இலக்கியாவின் நினைவுகள் உள்ளுக்குள் ஆர்ப்பரித்து எழுந்ததை தவிர்க்க இயலவில்லை.

இலக்கியாவுடன் ஒரு மழைநாளில் கடற்கரை ஓரத்து சிறு நகரத்தில் நிகழ்ந்த இன்ப  நிகழ்வான மழைநாளில் இலக்கியாவுடன் நிகழ்ந்துவிட்ட முதல்கலவியின் பின்னர் இன்று வரையிலும் பலப்பல சந்திப்புகள் எங்களுக்குள். சந்திப்புகளின் நோக்கம் வெவ்வேறாக தொடங்கினாலும் அதன் மையமும், இறுதியும் உணர்வுப் பூர்வமான ஓர் கலவியிலேயே முடிந்தது என்னவோ மறுக்கவியலா உண்மை.







ஏனோ இலக்கியாவுடன் கலவி கொள்ள ஆரம்பித்த பின்னர் என்னுள் இருந்த மூர்க்கத்தனம் குறைந்து வருவதைப்போல் ஓர் உணர்வு. அதுவும் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது பெண்களிடம் நான் காட்டும் காரணமில்லா வன்முறை குணம் ஒட்டுமொத்தமாய் காணாமல் போயிருந்தது. நினைத்த போதெல்லாம் கையிலிருக்கும் சொச்ச பணத்தையும் இறைத்து, கண்டகண்ட பெண்களிடம் படுத்து எழுந்து புணர்ச்சியில் புதுப்புது சுவைகளைத் தேடிக் கொண்டிருந்த நான் சமீபங்களில் இப்போது முற்றிலுமாய் மாறிப் போயிருந்ததை என்னாலேயே உணரமுடிந்தது.

கடந்துபோன பெரும்பாலான நாட்களில் இந்தநாள் என முன்னரே திட்டமிடாமல் இலக்கியாவுடன் எங்கெங்கோ எதார்த்தமாய் நிகழந்த சந்திப்புகள் ஒவ்வொன்றும் இருவருக்குமே பலப்பல பரிபூரணமான கலவி இன்பங்களைத் தந்து மகிழ்வித்திருந்தன. முன்போலவே இலக்கியாவுடனான அலைபேசி உரையாடல்கள் நீண்டு கொண்டிருந்தாலும் கூட, சமீப காலங்களில் அந்த உரையாடல்கள் அனைத்துமே காமம் என்னும் கருப்பு போர்வையை போர்த்தியிருக்க ஆசைப்பட்டதை நாங்கள் இருவருமே உணராமலில்லை.

எங்களின் சமீபத்திய ரெக்கார்டட் அலைபேசி உரையாடல்: (ஆ.ரா,நி.ரா,க மேட்டர்ல டேப் ரெக்கார்டிங்ல ஆல் இந்தியாவே அலறினாலும் வேற வழியில்லை)

”காமக்கவிதை எழுதுவேன்னு சொன்னதை நம்ப முடியலைடா”

“என்னாலயும்தாண்டி.... ஆனால் அப்படித்தான் சொல்றாங்க”

“சொல்லவந்த விஷயத்தை நாலுவரியில கோர்வையாக சொல்லிட்டாலே பெரியவிஷயம்.. அதுவே உனக்கு வராது...”

“ஹி.. ஹி..”

“எதிர்வீட்டு ஏகபத்தினியின் உள்பாவாடை உகாண்டாவில் உஜாலா போட்டும் கூட விந்து காயாமல் விரசமாய் தெரிந்தது” அப்படின்னு எதிர்த்த வீட்டுக்காரியோட உள்பாவாடை காயாத மேட்டரை உலகத்தையே சுத்தி யாருக்கும், அட உனக்கும் புரியாத மாதிரி உரைநடையில் சொல்ற ஆளுதானே நீ”

“உனக்குமா தெரிஞ்சிடுச்சு?”

“எதுடா? உன் உரைநடை கிறுக்குத்தனமா?”

“இல்லையில்லை... எதிர்வீட்டுக்காரியின் உள்பாவாடை விந்துக்கறை ரகசியம்”

“ச்சீ... விவஸ்தை இல்லாதவனே”

“அவளுக்கு முகத்துக்கு கீழே எல்லாமே டாப்டி.. ஆனால் முகத்தை ஒருவாட்டி பார்த்துட்டால் மொத்தமா இறங்கிடும்டி”

“அதுக்கு?”

“வேறென்ன? நீ சொன்ன அதே உள்பாவாடைதான்.. மூணு மாசத்துக்கு முன்னால ஒருநாள் முழுசா அவுக்காமல் தூக்கிவிட்டு அவளோட முகத்துமேல போட்டு மூடிட்டு இஷ்டத்துக்கு அடிச்சு விளையாண்டேண்டி... கழுத்துக்கு கீழே என்ன உடம்பு தெரியுமாடி? ச்சும்மா கும்முன்னு.. அதுவும் தொடைக்கு நடுவில இறுக்கிக் கவ்வுன அந்த கிறக்கம்.. மூணுபுள்ள பெத்தவன்னு சொன்னா நம்பவே மாட்டேடி.... அடடடா......”

”கருமம் பிடிச்சவனே? ஊருக்குள்ள ஒருத்தி கற்போட இருந்துடக் கூடாது?”

“அதெப்படி? அப்புறம் குஷ் சொன்னது தப்புன்னு ஆயிடும்ல...”

“விட்டுத்தொலை.. இங்கே கோட்டான், ஆந்தைங்க பண்ற வெத்து பில்ட்-அப்பே சகிக்கலை.... இதிலே உள்ளூர் அரசியலெல்லாமா?”

“ஹி.. ஹி...”

“சரி... சரி... விடு... எவன் எக்கேடு கெட்டுப்போனா நமக்கென்னடா? இப்ப என்னடா ப்ண்றே?”

”மணி ராத்திரி ஒன்னாச்சு... வேற என்ன பண்ண? ஏறின மப்பு இறங்கவிடாமல் ஏத்திக்கிட்டே இருக்கேண்டி”

”எங்கேடா?”

“வேறெங்க மொட்டைமாடிதான்.... நீ என்னடி பண்றே?”

“ஒரு கருமம் பிடிச்ச வலைப்பூ அட்ரஸ் கொடுத்தியே.. தெரியாத்தனமா படிச்சிட்டு உன் கூடவெல்லாம் என்னோட சிநேகம் தொடரனுமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேண்டா.. எது எதைத்தான் எழுதுறதுன்னு விவஸ்தையே இல்லையாடா இவிங்களுக்கு”

“அது ஒரு சுகம்டி... சொன்னால் புரியாது... காமத்தையே கருமம்னு சொல்ற ஒரே ஆளு நீதாண்டி... ஆனால் செய்ய ஆரம்பிச்சுட்டா நீ பண்ற் விஷயமெல்லாம்..... விடுடி... எனக்கே வெட்கமா இருக்கு”

”நான் கருமம்னு சொன்னது அதையில்லைடா. இரண்டு பேருக்குள்ள நடக்கிற விஷயத்தை இப்படி வெளியே பட்டவர்த்தனமாக சொல்றதுதான் சொன்னேன். செக்ஸ் பண்றது வேறடா.... மனசுக்கு ரொம்ப பிடிச்சவனோட ஒரு பொழுது அமைஞ்சிட்டால் அங்கே எல்லாமே எல்லைமீறத்தாண்டா செய்யும்”

“புரியலைடி...”

“இப்ப நீயும் நானும் பண்றோம்னா விகல்பமில்லாமல் ஒவ்வொரு தடவையும் ஒத்திசைவா பண்ணுவோம்... ஆனால் அதையும் மீறிய எதிர்பார்ப்புகள் கூட என்கிட்டயோ இல்ல உன்கிட்டயோ இருக்கும்டா”

“ஓ... ஆனால் நீ சொல்ற மாதிரி என்கிட்ட ஏதுமில்லடி.... அப்படியே இருந்தாலும் அன்னைக்கு மொட்டைமாடி கைப்பிடி சுவர்ல படுக்கவைச்சு செஞ்சேன்ல..  அந்தமாதிரி எதுவா இருந்தாலும் உடனே செயல்படுத்திப் பார்த்துடறதுதான் வழக்கம்”

“அடச்சீ....”

“ஏண்டீ? உனக்கு ஏதாவது எதிர்பார்ப்பு இருக்கா என்ன?”

“இருக்குடா... ஆனால் உன்னை மாதிரி பேட் டேஸ்ட் எல்லாம் இல்லை”

“ஏதோ ஒரு மசுரு.. சொல்லுடி கேட்கலாம்”

மூச்சுவிடாமல் முன்னூறு விநாடிகள் பேசினாள் எதையெதையோ.

”ம்ம்....” கிங்ஸ் கையைச் சுட்டதில் உதறினேன்.

”அவ்வளவுதானாடி?”

“இன்னும் இருக்குடா.... ஆனால் எல்லாத்தையும் இப்பவே சொல்லிடாமல் உன்னை அடுத்ததடவை பார்க்கும்போது செய்துகாட்டி ஆச்சரியப்படுத்தனும்னு ஒரு ஆசைடா...”

“அப்ப அடுத்த தடவை நம்ம மீட் பண்ணும்போது டபுள் ஜாக்பாட்ன்னு சொல்றே?”

“ம்ம்... இருக்கலாம்டா”

என ஒரு அற்புதமான கலவிக்கு அடிநாதமாய் முடிந்து கொண்டிருந்தன எங்களின் இன்ப உரையாடல்கள்.

எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதற்காய் அவளும், அவளைவிட நானும் எதிர்பார்த்துக் காத்திருந்த எங்களின் அடுத்த சந்திப்பிற்கான அந்த இனிய நாள் வெகு அருகாமையிலேயே இருக்கக்கூடும் என உள்ளுணர்வு சொல்லாமல் சொல்லியது.

காற்றலைகளில் நிகழ்ந்த இந்த அலைபேசி உரையாடலை நினைவலைகளிலிருந்து தூசுதட்டி உங்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கும் இந்த மழைநேரத்தில் என் அலைபேசி ஒலிக்கிறது.

அழைப்பு இலக்கியாவிடமிருந்து என்பதில் உள், அகம் எல்லாமே உற்சாகம் பொங்கிவர ஆர்வமாய் பட்டனை அழுத்தினேன்.

“ஆங்... சொல்லு இலக்கியா”

“.............”

“.............”

“.............”

“.............”

இம்முனையினின்று மறுபேச்சுக்கே வழிதராத ஆச்சர்யமூட்டும் எனக்கு மட்டுமே தெரிந்திருந்த சில கெட்டவார்த்தைகளையும் வாரி இறைத்த இலக்கியாவின் மறுமுனை பேச்சு ஓர் அருவியின் பேரிரைச்சலாய் நிற்காமல்.

சிற்சில இடங்களில் “ம்ஹீம்... “ என மட்டுமே பலஹீனமாய் பதிலளித்த தருணங்கள் எனக்கே கேட்காமல் போனது உண்மை.

இறுதியில் என் தரப்புக்கு வாய்ப்பே தராமல் அலைபேசி உரையாடலைத் துண்டித்தாள் இலக்கியா.

கூடல் இன்பத்தின் மூலம் புதுப்புது சுவைகளைத் தந்து கொண்டிருந்த இலக்கியாவுடன் முதல் முறையாய் ஓர் ஊடலின் ஆரம்ப விதை ஊன்றப்பட்டிருக்கிறது.

(தொடரும்)

Tuesday, February 1, 2011

காதலின் உச்சநிலை

காதலின் உச்சநிலை
காமம்
காவியத்தின் முதல்படி
காமம்
காதலில் இயைந்த
காமம்
என்றும் தந்துபோகும்
கட்டவிழ்ந்த குதிரையின்
காற்று வேகத்து
இன்பம் தனை

அள்ளிக் கொடுப்பதில்லை
காமம்
தாழ்ந்து பெறுவதில்லை
காமம்
இருவரின் இன்பத்தை
ஓருடலாய் இழைந்து
பகிர்வதே
காமத்தின் ரிஷிமூலம்

உடல்களின்
இயக்கத்தில்
பீறிடும் வியர்வையின்
ஊடே வெளிப்படும்
சிறு துளிகளின்
சேர்க்கைகளில்
இன்பமான
ஓர்துளியின்
இணைவே
காமம் என
படித்தும் பாமரனாய்
ஒரு துளிக்குள் மட்டும்
அடங்கிப் போகாமல்
முழுதாய் நீர்த்துப்
போகுமுன்னே
நீச்சலடித்து
காமக்கடலில்
மூழ்கியெழுபவனே
இன்ப முத்துக்களை
சேகரித்துக்
கொண்டிருக்கிறான்

Friday, January 7, 2011

இன்பம்


உடல்களின்
இயக்கத்தில்
பீறிடும் வியர்வையின்
ஊடே வெளிப்படும்
சிறு துளிகளின்
சேர்க்கைகளில்
இன்பமான
ஓர்துளியின்
இணைவே
காமம் என
படித்தும் பாமரனாய்
ஒரு துளிக்குள் மட்டும்
அடங்கிப் போகாமல்
முழுதாய் நீர்த்துப்
போகுமுன்னே
நீச்சலடித்து
காமக்கடலில்
மூழ்கியெழுபவனே
இன்ப முத்துக்களை
சேகரித்துக்
கொண்டிருக்கிறான்

கலாச்சாரம்....



பண்பாடு கலாச்சாரம்
என பலப்பல
பொய்ப் போர்வைகள்
போர்த்தியே பார்த்துவிட்டதில்
மறைந்துவிடுகின்றன
அல்லது   
தெரிந்தும் முழுதாய்
மறைக்கப்படுகின்றன
மூடிய கதவுகளில்
நான்கு சுவற்றுக்குள்
காரிருளில்
அல்லது
ஒளிவெள்ளத்தில்
நிகழ்ந்து கொண்டிருக்கும்
நிர்வாண வக்கிரங்கள்
கூடவே வெளியில்
சொல்லவியலா
வரைமுறையற்ற
அதீத வன்முறைகளும்